×

வேலூரில் பள்ளியில் மாணவிகளை தாக்கிய புகாரில் ஆங்கில ஆசிரியை பணியிடை நீக்கம்..!!

வேலூர்: வேலூர் மாவட்டம் இளவம்பாடி பள்ளியில் மாணவிகளை தாக்கிய புகாரில் ஆங்கில ஆசிரியை தீபலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆசிரியர் தீபலட்சுமியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி நடவடிக்கை எடுத்துள்ளார். வீட்டுப்பாடம் செய்யாத 3 மாணவிகளை ஆசிரியர் தீபலட்சுமி தாக்கியதில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகளின் பெற்றோர்கள் அளித்த புகாரில் போலீஸ் வழக்குப்பதிந்த நிலையில் தீபலட்சுமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

The post வேலூரில் பள்ளியில் மாணவிகளை தாக்கிய புகாரில் ஆங்கில ஆசிரியை பணியிடை நீக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Vellore ,Deepalakshmi ,Ilavambadi School ,Dinakaran ,
× RELATED வேலூர் கண்டோன்மென்ட் ரயில் நிலையம்...