- வழக்கறிஞர்கள் சங்கம்
- செந்துரா
- யூனியன் அரசு
- அரியலூர்
- வழக்கறிஞர் சங்கம்
- செந்துரா குற்றவியல் நீதிமன்றம்
- அரியலூர் மாவட்டம்
- தின மலர்
அரியலூர், ஆக.17: அரியலூர் மாவட்டம் செந்துறை குற்றவியல் நீதிமன்றம் முன்பு நேற்று ஒன்றிய அரசு கண்டித்து வக்கீல்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றறவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். வக்கீல்கள் சங்க பொறுப்பாளர்கள் காரல்மார்க்ஸ்,ஜெயபால், செல்வநம்பி, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து செந்துறையில் வக்கீல்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.