×

உடையார்பாளையம் அருகே கார் மோதி 2 சிறுவர்கள் படுகாயம்

ஜெயங்கொண்டம், ஆக.17: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே த.பொட்டக்கொல்லை தெற்கு தெருவை சேர்ந்த அமல்ராஜ் மகன் ஹரி பிரசன்னா(14),அதே ஊரைச் சேர்ந்த சங்கர் மகன் இன்பவன்(9). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் த.பொட்டக்கொல்லை அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் அருண் வர்மா என்பவரிடம் சிலம்பம் பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தனர்.அப்போது அதே ஊரைச் சேர்ந்த ராஜா என்பவர் அவரது காரில் அவரது மகன் ஜனா(18) என்பவருக்கு கார் ஓட்ட கற்று கொடுத்து கொண்டிருந்தார். அப்போது கார் கட்டுப்பாட்டை இழந்து ஹரி பிரசன்னா,இன்பவன் ஆகியோர் மீது மோதி படுகாயமடைந்தனர். இது குறித்து உடையார்பாளையம் எஸ்ஐ திருவேங்கடம் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.

The post உடையார்பாளையம் அருகே கார் மோதி 2 சிறுவர்கள் படுகாயம் appeared first on Dinakaran.

Tags : Wodiarpalayam ,Jayangkondam ,Amalraj ,Hari Prasanna ,T. Pottakollai South Street ,Wodeyarpalayam, Ariyalur district ,Wodeyarpalayam ,Dinakaran ,
× RELATED கள்ளச்சந்தையில் மது விற்றவரிடம் ₹50...