×

மார்த்தாண்டம் அருகே கொத்தனாருக்கு சரமாரி அடிஉதை

மார்த்தாண்டம், ஆக. 17: மார்த்தாண்டம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட காஞ்சிரகோடு குழிச்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் குமார்(53). கொத்தனார். இவர் வீட்டு அருகாமையில் உள்ள குறுகிய பாதை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அதே பகுதியை சேர்ந்த கொத்தனார் சந்திரன்(35) மற்றும் ஷைனி (28) ஆகியோர், எங்களுக்கு வழி விட மாட்டாயா? என்று ஜஸ்டின் குமாரிடம் கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜஸ்டின் குமாரை, சந்திரனும், ஷைனியும் அவதூறாக பேசியதாக தெரிகிறது. பின்னர் சந்திரன், ஜஸ்டின் குமார் தலையில் கம்பியால் தாக்கியதாகவும் தெரிகிறது. மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ஜஸ்டின் குமாரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பின்னர் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரன் மற்றும் ஷைனி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post மார்த்தாண்டம் அருகே கொத்தனாருக்கு சரமாரி அடிஉதை appeared first on Dinakaran.

Tags : Kothanar ,Marthandam ,Justin Kumar ,Kulichchavilai ,Kanchiragode ,Police Station ,Mason ,Dinakaran ,
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...