×

நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்

விளாத்திகுளம், ஆக. 17: நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி கிளையை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து 65 பயனாளிகளுக்கு ரூ.28 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கினார்.
விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தில் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 27வது கிளை திறப்பு மற்றும் கடனுதவி வழங்கும் விழா நடைபெற்றது. மார்க்கண்டேயன் எம்எல்ஏ, கலெக்டர் செந்தில்ராஜ், மண்டல இணை பதிவாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்து வங்கியை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். மேலும் பெண் தொழில்முனைவோர், சிறு குறு வணிகர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள் உள்பட 65 பயனாளிகளுக்கு மானியத்துடன் கூடிய ரூ.27 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பிலான கடனுதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.
விழாவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணை பதிவாளர் சிவகாமி, சரக துணை பதிவாளர் ரவீந்திரன், பொதுமேலாளர் சுந்தரேஸ்வரன், கூட்டுறவு ஒன்றிய சார்பதிவாளர் சாம்டேனியல், விளாத்திகுளம் தாசில்தார் ராமகிருஷ்ணன், புதூர் பிடிஓ சசிகுமார், திமுக ஒன்றிய செயலாளர்கள் புதூர் (மத்திய) ராதாகிருஷ்ணன், (கிழக்கு) செல்வராஜ், (மேற்கு) மும்மூர்த்தி, விளாத்திகுளம் (மேற்கு) அன்புராஜன், (கிழக்கு) சின்னமாாிமுத்து, (மத்திய) ராமசுப்பு, புதூர் பேரூர் செயலாளர் மருதுபாண்டியன், மாவட்ட கவுன்சிலர் ஞானகுருசாமி, புதூர் பேரூராட்சி தலைவர் வனிதா, மாவட்ட பிரதிநிதிகள் காளிமுத்து, முருகேசன், தொழிலதிபர் வாசுதேவன், விளாத்திகுளம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு 26 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் (2022-23) ரூ.802.45 கோடி இட்டு வைப்பு நிலுவையாகவும், ரூ.904.30 கோடி கடன் நிலுவையாகவும் உள்ளது. கடந்தாண்டு லாபம் ரூ.3.18 கோடி ஈட்டியுள்ளது. இவ்வங்கி தொடர்ந்து லாபத்துடன் செயல்பட்டு வருகிறது. தற்போது இதர வணிக வங்கிகளுக்கு நிகராக அனைத்து டிஜிட்டல் வங்கி சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த வங்கியின் புதிய கிளை சேவை மூலம் சுற்றியுள்ள 38 கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் பயனடைவார்கள்.

The post நாகலாபுரத்தில் மத்திய கூட்டுறவு வங்கி புதிய கிளை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Minister ,Geethajeevan ,Central Co-operative Bank ,Nagalapuram ,Vlathikulam ,Central Cooperative Bank ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலம்