×

அடுத்த 5 ஆண்டுகள் யாருக்கு பொற்காலம்? பிரதமருக்கு கபில்சிபல் எம்பி கேள்வி

புதுடெல்லி: அடுத்த 5 ஆண்டுகள் பொற்காலம் என்று கூறினீர்களே யாருக்கு? என்று பிரதமர் மோடிக்கு மாநிலங்களவை எம்பி கபில்சிபல் டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடி சுதந்திரதின விழா உரையில் அடுத்த 5 ஆண்டுகள் முன்எப்போதும் இல்லாத வளர்ச்சியின் காலமாகும். நாடு மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும். இந்தியாவின் கனவை நினைவாக்கும் ஒரு பொற்காலமாக நிரூபிக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். இந்நிலையில் பிரதமர் பேசியதை மாநிலங்களவை எம்பி கபில்சிபல் விமர்சித்துள்ளார். இது குறித்து கபில் சிபல் தனது டிவிட்டர் பதிவில்,‘‘ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் ஊழலை ஒழிக்க வேண்டும் என்று கூறினீர்கள். ஆனால் நீங்கள் கிட்டதட்ட 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறீர்கள். என்ன நடந்தது? அச்சே தின் எங்கே? மறந்துவிட்டதா? பணவீக்கம் இறக்குமதி செய்யப்படுகின்றது. எங்களது காய்கறிகள் எங்கே? அடுத்த 5 ஆண்டுகள் பொற்காலம். யாருக்கு? ஏழைகள், தலித்துகள், சிறுபான்மையினருக்கா அல்லது … ?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post அடுத்த 5 ஆண்டுகள் யாருக்கு பொற்காலம்? பிரதமருக்கு கபில்சிபல் எம்பி கேள்வி appeared first on Dinakaran.

Tags : Kapilcipal ,New Delhi ,Rajya Sabha ,Modi ,
× RELATED முதல்வர் கெஜ்ரிவால் வீட்டில்...