×

ஸ்ரீபெரும்புதூரில் டிரோன் சோதனை மையம்: அமைச்சர் தகவல்

சென்னை: தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் ஒன்றிய அரசின் பாதுகாப்பு உள்கட்டமைப்பு சோதனை திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த ஆளில்லா விமான (டிரோன்) சோதனை மையத்தை அமைக்க டிட்கோ நிறுவனம் திட்டமிட்டது. ஒன்றிய அரசின் மானியத்துடன் செயல்படும் இத்திட்டத்தை செயல்படுத்த டிட்கோ ஒப்பந்தப்புள்ளியை கோரியது. அதன் அடிப்படையில், கெல்டிரான், சென்ஸ் இமேஜ் ஸ்டாண்டர்டு டெஸ்டிங் & காம்ப்ளையன்ஸ் மற்றும் அவிக்‌ஷா ரீடெய்லர்ஸ் முதலான நான்கு நிறுவனங்கள் டிட்கோவுடன் இணைந்து ரூ45 கோடி மதிப்பீட்டில் ஆளில்லா விமான சோதனை மையத்தை அமைக்க உள்ளன. இந்த சோதனை மையம், ஸ்ரீபெரும்புதூர் அருகே வல்லம் வடகாலில் உள்ள சிப்காட் தொழிற் பூங்காவில் சுமார் 2.3 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ளது.

“இந்தியாவின் முதல் பொது ஆளில்லா விமான சோதனை மையம் தமிழ்நாட்டில் அமைய இருப்பது, வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி சூழலில் உயரிய இடத்தை தமிழ்நாடு அடைய வேண்டும். இத்துறையின் தேவைகளை புதுமையான முறையில் பூர்த்தி செய்து முதலீட்டாளர்களை ஈர்த்து வருகிறோம். வான்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை துவங்குவதற்கு விருப்பமான இடமாக தமிழ்நாட்டை மாற்ற இந்த சோதனை மையம் உதவும். வான்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தித்துறையின் பிரதிநிதிகளுடன் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மேலும் பல ஆலோசனைகள் பெறப்பட்டன. இத்துறை மேலும் வளர தேவையான நடவடிக்கைகளை எடுப்பதில் நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். இம்முயற்சிகளுக்கான பலன்கள் விரைவில் கிடைக்கும்.

The post ஸ்ரீபெரும்புதூரில் டிரோன் சோதனை மையம்: அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Drone Test Center ,Sriperumbudur ,CHENNAI ,Industries ,Minister ,D.R.P.Raja ,Government ,Tamil Nadu, India ,Dinakaran ,
× RELATED ஊராட்சி தலைவரின் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார்