தென்காசி: தென்காசி மாவட்டம் குருவிகுளத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (35), பெயின்டர். இவரது மனைவி இதயகுமாரி (32). திருமணமாகி மூன்று வருடங்கள் ஆகிறது. இந்நிலையில் இதயகுமாரி பைக் ஓட்ட கற்றுக் கொடுக்குமாறு கணவரிடம் கேட்டுள்ளார். இதனால் தங்கராஜ் பைக்கில் பின்புறம் இருந்து கொண்டு விஜயகுமாரியை பைக் ஓட்டச் சொல்லி கற்றுக் கொடுத்துள்ளார். அப்போது குருவிகுளத்தில் இருந்து ராமலிங்கபுரம் செல்லும் சாலையில் நைனாம்பட்டி விலக்கின் அருகே 15 அடி ஆழ ஓடையில் நிலைதடுமாறி பைக் விழுந்து தங்கராஜ் படுகாயம் அடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
The post மனைவிக்கு பைக் ஓட்ட கற்றுக்கொடுத்த கணவர் விபத்தில் சிக்கி பரிதாப பலி appeared first on Dinakaran.