×

முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சிறுமி டானியாவிற்கு அரசு சார்பில் வீடு: பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு

திருவள்ளுர்: ஆவடி அருகே முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் குடமடைந்த சிறுமி டானியா குடும்பத்திற்கு அரசு இலவசமாக ஒதுக்கிய இடத்தில் வீடு கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆவடி ஸ்ரீவாரி நகரை சேர்ந்த ஸ்டீபன் ராஜ், சௌபாக்கியம் தம்பதியின் 9 வயது மகள் டானியா அறிய வகை முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டார்.

முதலமைச்சரின் உத்தரவு பெயரில் இரண்டு முறை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு குணமடைந்தார். வீடு இல்லாமல் டானியா குடும்பம் கஷ்டப்படுவதை அறிந்த முதலமைச்சர் 3 சென்ட் நிலம் வழங்க உத்தரவிட்டார். திருநின்றவூர் அருகே ஒதுக்கப்பட்ட அந்த இடத்தில் தற்போது வீடு கட்டும் பணியை தற்போது டானியா குடும்பத்தினர் தொடங்கியுள்ளனர். இதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post முகசிதைவு நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட சிறுமி டானியாவிற்கு அரசு சார்பில் வீடு: பூமி பூஜை நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Tania ,Minister ,Gandhi ,Aavadi ,
× RELATED விரக்தியடைந்து, ஏமாற்றமடைந்துள்ள...