×

பாலவாக்கத்தில் கடலில் குளித்த பள்ளி மாணவன் மாயம்

துரைப்பாக்கம்: பாலவாக்கத்தில் நேற்று மாலை தனது நண்பர்களுடன் கடலில் இறங்கி குளித்த பள்ளி மாணவன் திடீரென மாயமாகிவிட்டார். அவருடன் குளித்த நண்பரை மீனவர்கள் உயிருடன் மீட்டனர். கடலுக்குள் காணாமல் போன பள்ளி மாணவனை தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.சென்னை பாலவாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது மகன் கவுசிக் (15). இவர் கொட்டிவாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது பள்ளி நண்பர் மதன் (15). இந்நிலையில், நேற்று மாலை கவுசிக், மதன் ஆகியோர் தனது 8 நண்பர்களுடன் பாலவாக்கம் கடற்கரைக்கு வந்துள்ளனர். பின்னர், அங்கு அனைவரும் கடலுக்குள் இறங்கி குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது ராட்சத அலை எழும்பி கவுசிக் மற்றும் மதன் ஆகிய இருவரையும் கடலுக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்ததும் சக நண்பர்கள் அலறி சத்தம் போட்டுள்ளனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு மீனவர்கள் ஓடிவந்து, கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மதனை உயிருடன் மீட்டனர். பின்னர் மதனை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருவான்மியூர் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர். அங்கு மீனவர்களின் உதவியுடன் ரப்பர் படகுகளில் கடலுக்குள் சென்று, ராட்சத அலை இழுத்து சென்றதில் காணாமல் போன பள்ளி மாணவன் கவுசிக்கை தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். இப்புகாரின்பேரில் நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

The post பாலவாக்கத்தில் கடலில் குளித்த பள்ளி மாணவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : palavakkam ,Palawakkam ,Palavakam ,
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...