
ஆஸ்திரேலியா: மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மகளிர் உலக கோப்பை கால்பந்து தொடர் ஆஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து நாட்டில் நடைபெற்று வருகிறது. லீக் நாகௌட் சுற்று மற்றும் காலிறுதி சுற்று ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில் ஸ்பெயின், சுவீடன், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.
இந்நிலையில் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் அரையிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின், ஸ்வீடன் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நீடித்த இந்த போட்டியின் முடிவில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் அசத்தல் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதி போட்டிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து, ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
The post விறுவிறுப்பான கட்டத்தில் மகளிர் உலகக்கோப்பை கால்பந்து: முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஸ்பெயின் appeared first on Dinakaran.