×

ஒன்பதாண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்ற இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்: முதல்வர் டிவிட்

சென்னை: ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்ற இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு: மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் – வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் – அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்.இவ்வாறு ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

The post ஒன்பதாண்டுகளாக இந்தியாவை பீடித்துள்ள பிணிகளை அகற்ற இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்: முதல்வர் டிவிட் appeared first on Dinakaran.

Tags : Independence Day ,India ,Chief Minister ,DeWitt ,Chennai ,M.K.Stalin ,
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...