×

நடிகர் மீதான வழக்குக்கு தடை

பெங்களூரு: கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திரா முன்னணி நடிகர் ஆவார். இந்நிலையில், கடந்த 12ம் தேதி முகநூல் நேரலையில் பேசிய நடிகர் உபேந்திரா, விமர்சனங்கள் எழத்தான் செய்யும் என்பதை குறிப்பிடும் வகையில், ’ஊருக்கு ஒரு சேரி இருக்கத்தான் செய்யும்’ என்று பேசியிருந்தார். பெங்களூரு சிகே அச்சுகட்டு காவல் நிலையத்தில் அவர் மீது எஸ்.சி,எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி உபேந்திரா சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம் மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், உபேந்திரா மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

The post நடிகர் மீதான வழக்குக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Bengaluru ,Upendra ,Facebook ,
× RELATED நேபாள துணை பிரதமர் உபேந்திரா ராஜினாமா