×

செங்கோட்டையில் தேசிய கொடி; பிரதமர் மோடிக்கு இது கடைசி: அடுத்த ஆண்டு எங்கள் முறை; லாலுபிரசாத் யாதவ் உற்சாகம்

பாட்னா: டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி கடைசி முறையாக தேசிய கொடியை ஏற்றி வைத்துள்ளார். அடுத்த ஆண்டு எங்கள் முறை வரும் என்று லாலுபிரசாத் யாதவ் தெரிவித்து உள்ளார். பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் யாதவ் நேற்று பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் மனைவி ரப்ரிதேவியுடன் சுதந்திர தினம் கொண்டாடினார். மனைவியுடன் இணைந்து அவர் தேசிய கொடி ஏற்றினார். அதன்பிறகு லாலுபிரசாத் கூறியதாவது: நாட்டு மக்களுக்கு எனது சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஸ், மவுலானா அபுல் கலாம் ஆசாத் மற்றும் பாபாசாகேப் பீம்ராவ் அம்பேத்கர் போன்ற பெரிய மனிதர்களுக்கு எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவர்களின் பங்களிப்புகளை தேசம் ஒருபோதும் மறக்க முடியாது. அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்ற முடியாது. அது நடக்காது. இது அவரது கடைசி முறை. அடுத்த முறை, செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவது எங்கள் முறை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஒற்றுமையாக நிற்போம்: மம்தா
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டிவிட்டர் பதிவில்,’ பிளவுகளுக்கு அப்பால் எழுவோம், நமது வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒளிமயமான, சிறந்த இந்தியாவை நோக்கிய நமது பயணத்தில் ஒற்றுமையாக நிற்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

The post செங்கோட்டையில் தேசிய கொடி; பிரதமர் மோடிக்கு இது கடைசி: அடுத்த ஆண்டு எங்கள் முறை; லாலுபிரசாத் யாதவ் உற்சாகம் appeared first on Dinakaran.

Tags : Red Fort ,PM Modi ,Laluprasad Yadav ,Patna ,Modi ,Delhi ,Dinakaran ,
× RELATED அடுத்தது செங்கோட்டையனா? எஸ்.பி...