×

கணவனை கொன்ற மனைவி கைது

பரமத்திவேலூர்: நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் கந்தநகர் பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார் (40). இவர் வேலூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டீ கடையில் சரக்கு மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கலா (36). விஜயகுமாருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் விஜயகுமார் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த கலா, கணவர் விஜயகுமாரை சுத்தியலால் தலையில் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த விஜயகுமாரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி விஜயகுமார் நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து பரமத்திவேலூர் போலீசார் கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி, கலாவை கைது செய்தனர். பின்னர் அவர், சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

The post கணவனை கொன்ற மனைவி கைது appeared first on Dinakaran.

Tags : Paramathivellur ,Vijayakumar ,Kandanagar ,Paramathivellur, Namakkal district ,Vellore ,
× RELATED காவல்துறை சார்பில் சிறப்பு குறைதீர் முகாம்