×

நெசவுத்தொழிலாளி தற்கொலை

 

ஈரோடு, ஆக. 15: கவுந்தப்பாடி அடுத்துள்ள பொம்மன்பட்டி, மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (53). நெசவுத்தொழிலாளியான இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு காலில் அடிபட்டு புண் ஏற்பட்டுள்ளது. சர்க்கரை அளவு அதிகரித்ததால் புண் சரியாகாமல் சண்முகசுந்தரம் அவதிப்பட்டு வந்தார்.

இதனால் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த சண்முக சுந்தரம், நேற்று முன்தினம் காலை தனது வீட்டில் நூல் சேலையால் விட்டத்தில் தூக்கிட்டுக்கொண்டார். பின்னர் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கவுந்தப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சண்முகசுந்தரம் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நெசவுத்தொழிலாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Erode ,Shanmugasundaram ,Mariamman Koil Road, Pommanpatti ,Kaunthappadi ,Dinakaran ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...