×

ஆற்றில் மணல் அள்ள அனுமதி வேண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை

 

ஆர்.எஸ்.மங்கலம், ஆக.15: ஆர்.எஸ்.மங்கலம் அருகே கோட்டைக்கரை ஆற்றில் சனவேலி, கொக்கூரணி, செட்டியகோட்டை, ஆனந்தூர், கோவிந்தமங்கலம், குலமாணிக்கம் வெட்டுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் மணல் உள்ளது. இப்பகுதிகளில் தொடர்ந்து மணல் திருட்டு நடந்து வருகின்றது. மணல் திருட்டில் ஈடுபடுவோர் மீது போலீசார் அவ்வப்போது வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.

ஆகையால் ஆற்றில் நடைபெறும் மணல் திருட்டுக்களை தடுக்கும் விதமாகவும், மாட்டு வண்டி தொழிலாளர்களின் பிழைப்புக்கு வழிகாட்டும் விதமாகவும் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளி விற்பனை செய்ய அரசு அனுமதி வழங்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் இப்பகுதியில் மணல் திருட்டுக்களை தடுப்பதுடன், மணல் தட்டுப்பாட்டால் தடைபட்டு வரும் கட்டுமானப் பணிகளும், விரைந்து நடைபெறும் நிலை ஏற்படும். கோட்டைக்கரை ஆற்றில், மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ளிச் செல்வதற்கு அரசு அனுமதி வழங்கி ஏழை, எளிய தொழிலாளர்களின் நலனை காக்க மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஆற்றில் மணல் அள்ள அனுமதி வேண்டும் மாட்டுவண்டி தொழிலாளர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : R.R. S.S. Mangalam ,R. S.S. ,Chanaveli ,Kokkurani ,Setikotta ,Anandur ,Govindamangalam ,Kulamanickam Vettukulam ,Dinakaran ,
× RELATED பிரதமர் மோடி மீது தெலுங்கானா ஆளுநர்...