×

ஒன்றிய அரசை கண்டித்து அரியலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

அரியலூர், ஆக. 15:அரியலூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து இந்தி மற்றும் சமஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் ஒன்றிய அரசைக் கண்டித்தும்,மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்கறிஞர்கள் கதிரவன், ராஜா மற்றும் வழக்கறிஞர் விஜி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து அரியலூரில் வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Lawyers Association ,Ariyalur ,Union Government ,Advocates' Association ,Ariyalur Integrated Court Complex ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா