×

சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாளை வஉசி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் பங்கேற்பு

நெல்லை, ஆக. 15: சுதந்திர தினவிழாவையொட்டி பாளை வஉசி மைதானத்தில் நேற்று போலீசார் அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்களும் கலந்து கொண்டனர்.
நாட்டின் 77வது சுதந்திர தினவிழா இன்று நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் கொண்டாடப்படுகிறது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இதையொட்டி கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை மாவட்ட, மாநகர ஆயுதப்படை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களின் அணிவகுப்பு பயிற்சி நடந்தது.

நேற்று காலை பாளை வஉசி மைதானத்தில் மாநகர, மாவட்ட ஆயுதப்படை போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவ, மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்ட சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை நடந்தது. இதில் நெல்லை மாநகர ஆயுதப்படை போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) காமேசுவரன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, திறந்த ஜீப்பில் வந்து அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். நெல்லை மாவட்ட ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பிரமணியன், இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி ஆகியோர் தலைமையில், எஸ்ஐக்கள் அஞ்சூர், முத்துமாரி, எஸ்எஸ்ஐ செல்வமுருகன் ஆகியோர் வழிகாட்டுதல்படி இந்த சுதந்திரதின அணிவகுப்பு ஒத்திகை நடந்தது.

நெல்லை கலெக்டர் கார்த்திகேயன் காலை 9.05 மணிக்கு கொடியேற்றுகிறார்
நெல்லை பாளை. வஉசி மைதானத்தில் நடக்கும் சுதந்திர தின விழாவில் இன்று காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றுகிறார். நெல்லை மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள் பாளையங்கோட்டை வஉசி மைதானத்தில் நடக்கிறது. காலை 9.05 மணிக்கு கலெக்டர் கார்த்திகேயன் தேசிய கொடியேற்றி வைத்து போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார். விழாவில் பல்வேறு அரசுத் துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளும், சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெறுகிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் காலை 8.15 மணிக்கு நடக்கும் சுதந்திர தின கொண்டாட்டத்தில் வளாக இயக்குநர் சுரேஷ் கொடியேற்றி வைத்து பேசுகிறார். விழாவில் அணுமின் நிலைய விஞ்ஞானிகள், அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.

The post சுதந்திர தின விழாவை முன்னிட்டு பாளை வஉசி மைதானத்தில் போலீசார் அணிவகுப்பு ஒத்திகை ஊர்க்காவல் படையினர், என்சிசி மாணவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Independence Day ,Palai Vausi ,Home Guards ,NCC ,Paddy ,Palai Vausi ground ,Home Guard ,Palai Vausi Maidan ,
× RELATED பாளை வஉசி விளையாட்டு அரங்கத்தில்...