×

தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல்

தூத்துக்குடி, ஆக. 15: கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மேயர் ஜெகன்பெரியசாமி சர்க்கரை பொங்கல் வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஆக.14ம் தேதி பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் முன்னிலையில் மேயர் ஜெகன்பெரியசாமி மாணவ- மாணவிகளுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகராட்சி பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் சரவணன், திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மண்டல தலைவர் அன்னலட்சுமி, பகுதி செயலாளர் சுரேஷ்குமார், வட்ட செயலாளர் பாலன், பள்ளி தலைமை ஆசிரியர் எமல்டா மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

The post தூத்துக்குடி மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு சர்க்கரை பொங்கல் appeared first on Dinakaran.

Tags : Sugar ,Pongal ,Thoothukudi Corporation School ,Tuticorin ,Mayor ,Jaganperiyasamy ,Sugar Pongal ,Dinakaran ,
× RELATED இளநீர் நன்னாரி ஜூஸ்