×

மாமல்லபுரத்தில் கடலில் குளித்த கல்லூரி மாணவன் மாயம்

மாமல்லபுரம்,: மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே கடலில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மாயமானான். ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திர ஐயா. இவரது, மகன் வெங்கடரோகித் (19), மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி இசிஆர் சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இன்ஜினியரிங் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், வெங்கடரோகித் தன்னுடன் படிக்கும் சில நண்பர்களுடன் நேற்று மதியம் மாமல்லபுரம் கடற்கரை கோயிலுக்கு அருகே ஜாலியாக கடலில் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது, திடீரென எழுந்த ராட்சத அலை வெங்கட ரோகித்தை இழுத்துச்சென்றது. இதைப் பார்த்த, அவரது நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அதற்குள் ராட்சத அலையில் சிக்கி நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். தகவலறிந்த மாமல்லபுரம் தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் உதவியுடன் கல்லூரி மாணவரை தேடி வருகின்றனர்.இதுகு மாமல்லபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசரிக்கின்றனர்.

The post மாமல்லபுரத்தில் கடலில் குளித்த கல்லூரி மாணவன் மாயம் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Nellore, Andhra Pradesh ,
× RELATED செங்கல்பட்டு – மாமல்லபுரம் இடையே...