×

குடும்ப தகராறில் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (47). இவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், கூடுவாஞ்சேரியில் உள்ள கண்ணாடி கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாக கூறப்படுகின்றது. இவர், கடன் வாங்கி புதிய வீடு கட்டியுள்ளார்.

இதனால், அதிக கடன் இருப்பதாக கூறப்படுகின்றது. தினமும் மது அருந்திவிட்டு வந்து வீட்டில் சண்டை போடுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், குடும்பத்தில் தொடர்ந்து பிரச்னை நீடித்து வந்தது. இதனால், நேற்று வீட்டில் ரமேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.மறைமலை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குடும்ப தகராறில் கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Chengalpattu ,Ramesh ,Rajaji Street, Kattankolathur, Chengalpattu district ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு அல்லானூர் அருகே...