×

ஆவடி அருகே புதிய சாலை அமைக்கும் பணி: சா.மு.நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்

ஆவடி: புதிய சாலைகள் அமைக்கும் பணியை ஆவடி சட்ட மன்ற உறுப்பினர் ஆவடி சா.மு.நாசர் தொடங்கிவைத்தார். ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 6வது மாநில நிதிக்குழு மானியம் 2023-24 (நிலுவை தொகை) கீழ் 10 கிமீ தூரம் உள்ளடக்கிய 32 சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தங்கள் அளித்து பணி உத்தரவு வழங்கப்பட்டது. இந்நிலையில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சேதமடைந்த சாலைகளை சீரமைக்கும் பணிகளின் துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக ஆவடி மநகராட்சிகு உட்பட்ட 44வது வார்டு காமராஜர் நகர், 5வது தெருவில் ரூ.25.10 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 23வது வார்டு காந்திநகர் செக் போஸ்ட் விவேகானந்தா தெருவில் 15.20 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணி, 18வது வார்டு, அண்ணா சாலை, பாபுநகர் பட்டாபிராமில் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கும் பணி, 3வது வார்டு மிட்டினமல்லி உயர்நிலைப்பள்ளி தெரு, வைகோ தெருவில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, 29வது வார்டு, சரஸ்வதி பிரதான சாலை திருமுல்லைவாயலில் ரூ.59.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைக்கும் பணி, 27வது வார்டு பாரதி நகர் 8வது தெருவில் ரூ.25.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளை ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசர் பூஜையை போட்டு துவக்கிவைத்தார்.

இதன்பின் இனிப்புகளை வழங்கிய ஆவடி சட்டமன்ற உறுப்பினர் சா.மு.நாசரிடம் பொது மக்கள் தினசரி வழங்கி வரும் குடிநீரின் நேரத்தை அதிகரித்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விரைவில் நிறைவேற்றி தருவதாகவும் உறுதியளித்தார். நிகழ்ச்சியில் ஆவடி மாநகர ஆணையர் தர்ப்பகராஜ், ஆவடி பொறுப்பாளர் சன் பிரகாஷ், பகுதி செயலாளர் பேபிசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஆவடி அருகே புதிய சாலை அமைக்கும் பணி: சா.மு.நாசர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Aavadi ,HM ,MLA ,Aavadi Legislative Council ,S.M. ,Nasar ,Avadi Municipal Corporation ,Avadi ,PM Nasser ,Dinakaran ,
× RELATED ஊட்டி காங்கிரஸ் மாஜி எம்எல்ஏ காலமானார்