- சேலம்
- ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா
- புது தில்லி
- அமைச்சர்
- தமிழ்நாடு அரசு
- ஆர் காந்தி
- மத்திய அமைச்சர்
- பியுஷ் கோயல்
- தில்லி
புதுடெல்லி: டெல்லி வந்த தமிழ்நாடு அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை நேற்று சந்தித்து மனுவை வழங்கினார். அதில், ‘‘தமிழ்நாடு ஜவுளித்துறை ஏற்றுமதி சரிந்து மந்தமான வியாபாரம், நிலையற்ற பருத்தி விலை உள்ளிட்ட பிரச்னைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக 11சதவீத இறக்குமதி வரியில் இருந்து ஜவுளித்துறையை காப்பாற்றுவது தொடர்பாக ஒன்றிய ஜவுளித்துறை பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அதேப்போன்று சேலத்தில் ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பது குறித்து ஒன்றிய அரசு விரைந்து ஆவன செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் கலந்தாலோசித்து ஆவன செய்வதாக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல், தமிழக அமைச்சர் ஆர்.காந்தியிடம் உறுதியளித்தார்.
The post ஒன்றிய அமைச்சரிடம் வலியுறுத்தல்: சேலம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா appeared first on Dinakaran.