×

பேட்டை டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து: 4 பேருக்கு வலை

பேட்டை: நெல்லை அருகே பேட்டை டாஸ்மாக் பார் ஊழியரை கத்தியால் குத்திய வழக்கில் தொடர்புடைய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை அருகே பேட்டை அசோகர் தெருவை சேர்ந்தவர் முருகன் மகன் இளவரசன் என்ற ஆஷா (35). இவர் பேட்டை கருங்காடு ரோடு டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆகி கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டார். நேற்று இரவு அசோகர் தெரு பெருமாள் கோயில் அருகே நின்று கொண்டிருந்த இவரை வழிமறித்த கும்பல் கத்தி மற்றும் கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர். பலத்த காயம் அடைந்த இளவரசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த மாரியப்பன் என்ற டப்பா மாரியப்பன், அவரது மனைவி சுடலி, மகன்கள் மாதவன், சந்துரு ஆகிய நான்கு பேரை தேடி வருகின்றனர். போலீசாரின் விசாரணையில் இளவரசன் என்ற ஆஷாவுக்கும் மாரியப்பன் குடும்பத்திற்கும் இடத்தகராறு தொடர்பாக ஏற்கனவே போலீசில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக நேற்று நீ எவ்வாறு புகார் தெரிவிக்கலாம் என கூறி தகராறில் ஈடுபட்டு அவரை கத்தியால் குத்தியதுடன், கம்பியால் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் தடுக்க அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

The post பேட்டை டாஸ்மாக் பார் ஊழியருக்கு கத்திக்குத்து: 4 பேருக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Hood Tasmac ,Pettah ,Tasmac Bar ,Nellai ,
× RELATED தா.பேட்டை அருகே கூலித்தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை