×

முத்தங்கா சரணாலயத்தில் யானை உயிரிழந்தது

கூடலூர்: கேரளாவில் தமிழக எல்லையில் நீலகிரி அருகே உள்ள முத்தங்கா சரணாலயத்தில் அம்மு என்று அழைக்கப்படும் 9 வயது வளர்ப்பு பெண் யானை உயிரிழந்தது. கடந்த 9 வருடங்களுக்கு முன், பிறந்து ஆறு மாதங்கள் ஆன நிலையில் கண்ணனூரை அடுத்த வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வந்த அந்த குட்டி யானை வனத்துறை பாதுகாப்பில் கொண்டு வரப்பட்டது. முத்தங்கா சரணாலயத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இந்த யானை நேற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்தது. யானை கடந்த சில மாதங்களாக உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், அதற்கு தொடர் சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

The post முத்தங்கா சரணாலயத்தில் யானை உயிரிழந்தது appeared first on Dinakaran.

Tags : Mutanga ,Cuddalore ,Ammu ,Muthanga ,Nilgiris ,Tamil Nadu ,Kerala ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்து...