×

சுடுகாட்டில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் சுடுகாடு அருகே மரத்தில் தூக்கிட்டு வாலிபர் ஒருவர் சடலமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து முத்துப்பேட்டை போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், இவர் முத்துப்பேட்டை அடுத்த கோவிலூர் வடக்காட்டை சேர்ந்த மணிகண்டன் மகன் சந்தோஷ்(20) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் மங்கலூரை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இதில் அந்த பெண் கர்ப்பிணியானார். அவரை திருமணம் செய்ய மறுத்ததால் முத்துப்பேட்டை போலீசில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் இருகுடும்பத்தினரையும் அழைத்து போலீசார் சமரசம் செய்ததுடன் ஒரு மாதத்துக்கு முன் இருவருக்கும் திருமணமும் செய்து வைக்கப்பட்டது. பின்னர் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில் சந்தோஷ் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. எதற்காக சந்ேதாஷ் தற்கொலை செய்து கொண்டார்? வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர். திருமணமான ஒரு மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post சுடுகாட்டில் புதுமாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sudugat ,Muthuppet ,Kovilur ,Muthupet, Tiruvarur district ,
× RELATED கந்தப்பரிச்சான் ஆறு குறுக்கே ₹4.95 கோடியில் புதிய பாலம் கட்டும் பணி தீவிரம்