×

ஊட்டியில் நீர்பனி: விவசாயிகள் அச்சம்

ஊட்டி: ஊட்டியில் முன்கூட்டியே நீர் பனி பெய்ததால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் இம்முறை எதிர்பார்த்த அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யவில்லை. கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தாலும் கனமழை பெய்யவில்லை. இதனால், நீர்நிலைகளில் தண்ணீர் அளவு குறைந்து காணப்படுகிறது. இந்த நிலையில் முன்கூட்டியே தற்போது நீர்பனி விழத்துவங்கி உள்ளது. இன்று காலை நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நீர்பனி பெய்தது. குறிப்பாக ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நீர்பனி தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. மழை பெய்ய வேண்டிய சமயங்களில் நீர்பனி விழுவதால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர். முன்கூட்டியே நீர்பனி விழுவதால் தேயிலை மற்றும் மலை காய்கறிகளை நோய் தாக்கும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர். மேலும் நீர்பனி காரணமாக ஊட்டி மற்றும் சுற்றுவட்டாரங்களில் குளிரும் சற்று அதிகரித்துள்ளது. இதனால் அதிகாலை நேரங்களில் தேயிலை மற்றும் மலை காய்கறி தோட்டங்களுக்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அவதிக்குள்ளாகினர்.

The post ஊட்டியில் நீர்பனி: விவசாயிகள் அச்சம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED கொல்லிமலை முதல் காந்திபேட்டை வரை புறவழி சாலை விரிவாக்க பணிகள் தீவிரம்