×

திருப்பதியில் 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை: மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம்..!!

திருமலை: திருப்பதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டத்தால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் கொவூரு மண்டலம்கோத்திரெட்டிபாலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ். இவரது மனைவி சசிகலா. இவர்களது மகள் லட்ஷிதா(6). இவர்கள் 3 பேரும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக அலிபிரியில் இருந்து திருமலைக்கு பாத யாத்திரையாக மலைப்பாதை வழியாக சென்றனர். இரவு 7.30 மணியளவில் லட்சுமி நரசிம்ம சுவாமி சன்னதி எதிரே சென்றபோது லட்ஷிதா திடீரென மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து லட்ஷிதாவை இரவு முழுவதும் தீவிரமாக தேடினர். மறுநாள் காலை வனப்பகுதியில் லட்ஷிதா காயங்களுடன் சடலமாக கிடந்தார்.

போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பதி ரூயா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுத்தையை பிடிக்க 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. பின்னர் லட்சுமி நரசிம்ம சன்னதி அருகே உள்ள வனப்பகுதியில் வைத்திருந்த கூண்டில் சிறுத்தை சிக்கியது. இந்த நிலையில், மேலும் ஒரு சிறுத்தை நடமாட்டம் ஏற்பட்டிருக்கிறது. இதை கண்ட மலைப்பாதையில் சென்ற பக்தர்கள் சத்தம் போட்டதால் சிறுத்தை அங்கிருந்து கட்டுக்குள் ஓடியது. இதனால் மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்ட இருப்பதால் பக்தர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு நிலவி வருகிறது.

The post திருப்பதியில் 6 வயது சிறுமியை கொன்ற சிறுத்தை: மலைப்பகுதியில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பக்தர்கள் அச்சம்..!! appeared first on Dinakaran.

Tags : Tiruppati ,Tirumalai ,Tirupathi ,Andhra State Nellore District ,Kovuru ,Village ,
× RELATED திருப்பதி கோயிலில் வசந்த உற்சவம்...