×

சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

 

விழுப்புரம், ஆக. 14: விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே முப்பிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார்(27). பிரபல சாராய வியாபாரான இவர் அப்பகுதியில் தொடர்ந்து சாராயம் கடத்துவது, விற்பனை செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வந்தார். போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தாலும் ஜாமீனில் வெளியே வரும் இவர் இத்தொழிலில் ஈடுபட்டு வருவதால், இவரின் நடவடிக்கையை தடுக்கும் வகையில் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய எஸ்பி சஷாங்சாய் ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். அதன் பேரில் பெரியதச்சூர் காவல்நிலைய போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் சந்தோஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது appeared first on Dinakaran.

Tags : Villupuram ,Santhosh Kumar ,Muppili ,Tindivanam ,Villupuram district ,Dinakaran ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...