×

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்: சூனாம்பேட்டில் பரபரப்பு

 

செய்யூர், ஆக. 14: சூனாம்பேட்டில், செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், சூனாம்பேடு ஊராட்சியில் இல்லீடு கிராமம் உள்ளது. இங்கு சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உளளன. இங்குள்ள குடியிருப்புகளுக்கு மத்தியில் ஏர்டெல் 5ஜி செல்போன் டவர் அமைக்க கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது.

குடியிருப்புகளுக்கு இடையே செல்போன் டவர் அமைப்பதால் கதிர்வீச்சு காரணமாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாதிக்கப்பதால் செல்போன் டவர் அமைக்கக்கூடாது என அதிகாரிகளிடம் அக்கிராமமக்கள் மனு அளித்திருந்தனர். ஆனாலும், அதிகாரிகள் அதனை கண்டு கொள்ளவில்லை. எனவே, செல்போன் டவர் அமைக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதனால், ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் சூனாம்பேடு- மதுராந்தகம் நெடுஞ்சாலையில் நேற்று திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த சூனாம்பேடு போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி டவர் கட்டுமான பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து, கிராமமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

The post செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு பொதுமக்கள் சாலை மறியல்: சூனாம்பேட்டில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Soonampet ,Sayyur ,
× RELATED விதிகளை மீறி ஏரியிலிருந்து மண்...