×

ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கேட்டு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

திருத்துறைப்பூண்டி, ஆக. 14: ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கேட்டு திருத்துறைப்பூண்டியில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருத்துறைப்பூண்டி வட்டக் கிளை சார்பில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஓய்வு பெற்ற சத்துணவு, அங்கன்வாடி ,கிராம உதவியாளர் ,ஊராட்சி செயலாளர்கள், வனத்துறை ஊழியர்கள் ,முதலான தொகுப்பூதியம் பெற்று ஓய்வு பெற்ற அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டத் தலைவர் ஜெகவீரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் நரசிம்மன் வரவேற்றார். மாநிலச் செயலாளர் குரு சந்திரசேகரன், முன்னாள் சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் மேகநாதன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிரகாஷ் ,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அழகரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் வேதரத்தினம்.

ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நல சங்கத்தின் மாவட்ட செயலாளர் சண்முகம், முன்னாள் சத்துணவு சங்க அமைப்பாளர்கள் கருணாகரன், பக்கிரிசாமி ஸ்டெல்லா மேரி, மதியழகி மற்றும் தமிழ்செல்வி, மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் முனியன், வட்ட துணைத் தலைவர் நாகராஜன், வட்ட பொருளாளர் ராஜேந்திரன் மூத்த உறுப்பினர் ராமலிங்கம், துணைத் தலைவர்கள் நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் உலகநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் வட்ட துணைத் தலைவர் தருமையன் நன்றி கூறினார்.

The post ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க கேட்டு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Pensioners' Associations ,Thirutharapoondi ,Tiruthurapundi ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு ஊராட்சியிலும் 4 நாள் மருத்துவ முகாம்