- வீரம காளியம்மன் கோயில்
- அம்மாபேட்டை
- தஞ்சாவூர்
- வீரமாகாளி அம்மன் கோயில்
- அம்மாபேட்டை மார்வாடி தெரு, தஞ்சாவூர் மாவட்டம்...
- திருவிளக்கு பூஜை
- அம்மாபேட்டை வீரமாகாளியம்மன் கோயில்
தஞ்சாவூர், ஆக. 14: தஞ்சாவூர் மாவட்டம், அம்மாப்பேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமகாகாளி அம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் கலந்து கொண்டு 108 திருவிளக்குகளை ஏற்றி வைத்து மங்களப்பொருள்களால் பூஜை செய்து அம்மனை வழிபட்டனர்.
இந்த திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டவர்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு திருவிளக்குகள், பட்டுப்புடவைகள், பித்தளை செம்புகள் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக குழு அசோக்குமார் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.
The post அம்மாப்பேட்டை வீரமாகாளியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.