×

உலக நன்மை வேண்டி காமாட்சியம்மன் முனீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை

 

வேதாரண்யம்,ஆக.14: வேதாரண்யம் அடுத்த திருக்குவளைக்கட்டளை, அண்ணாபேட்டை காமாட்சியம்மன் முனீஸ்வரர் ஆலயத்தில் 11ம் ஆண்டு திருவிளக்கு பூஜை உலக நன்மை வேண்டி நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு உலக நன்மை வேண்டி பூஜை செய்து வழிபட்டனர். முன்னதாக காமாட்சியம்மன் முனீஸ்வரர் சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேக ஆராதனை நடைபெற்றது. சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதணை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அர்ச்சனை செய்து சுவாமியை வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையொட்டி நடந்த விளக்கு பூஜையில் சுமங்கலி பெண்களுக்கு தாலிகயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட, மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் கிராமத்தினர் செய்து இருந்தனர். பொது மக்களுக்கு இடையூறாக சாலையில் சுற்றி திரியும் கால்நடைகளின் உரிமையாளருக்கு அபராதம் வேதாரண்யம் நகராட்சி, கீழ்வேளூர் பேரூராட்சி எச்சரிக்கை

The post உலக நன்மை வேண்டி காமாட்சியம்மன் முனீஸ்வரர் கோயிலில் திருவிளக்கு பூஜை appeared first on Dinakaran.

Tags : Kamatsiyamman Muneeswarar Temple ,Thiruvilakku Puja ,Annapet ,Thirukkuvelakattalay ,
× RELATED பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலில் 108 பெண்கள் திருவிளக்கு பூஜை