×

சிவகிரியில் மனநலம் பாதித்த வாலிபர் தற்கொலை

 

சிவகிரி, ஆக. 14: சிவகிரியில் மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சிவகிரி கட்டபொம்மன் தெருவைச் சேர்ந்த கன்னியப்பனின் மகன் முருகன் (30). சற்று மனநலம் பாதிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் இவர், திருமணம் செய்துகொள்ளாமல் தனது பெற்றோர் பராமரிப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று வீட்டில் தனியாக இருந்த முருகன், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி மற்றும் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

The post சிவகிரியில் மனநலம் பாதித்த வாலிபர் தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Sivagiri ,Sivagiri Kattabomman Street ,
× RELATED சிவகிரி அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடிய 3 பேருக்கு ரூ.1.50 லட்சம் அபராதம்