×

தலித் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் உபேந்திரா மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: கன்னட நடிகரும் இயக்குநருமான உபேந்திரா, கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் ஆவார். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் விஷால் நடித்த சத்யா திரைப்படத்தில் வில்லனாக நடித்து மிரட்டியவர் உபேந்திரா. அவரது நடிப்பில் உருவாகியிருக்கும் ’புத்திவந்தா 2’ வரும் செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாகிறது.
முகநூல் நேரலையில் நடிகர் உபேந்திரா தலித் மக்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தலித் சமூக அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தனது கருத்துக்கு உபேந்திரா மன்னிப்பு கேட்டார். சமூக அமைதியை கெடுக்கும் விதமாக சாதி ரீதியாக பேசிய உபேந்திரா மீது சமூக நலத்துறை உதவி இயக்குநர் மதுசூதன் அளித்த புகாரின் பேரில் பெங்களூரு சிகே அச்சுகட்டு காவல் நிலையத்தில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post தலித் குறித்த சர்ச்சை பேச்சு நடிகர் உபேந்திரா மீது வழக்குப்பதிவு appeared first on Dinakaran.

Tags : Upendra ,Bengaluru ,Dalit ,
× RELATED நேபாள துணை பிரதமர் உபேந்திரா ராஜினாமா