×

வாய்க்காலில் கார் பாய்ந்து 3 பேர் பலி

காரைக்கால்: காரைக்காலை சேர்ந்தவர்கள் கணபதி (25), வாசிப்முஷாரப் (22), அருண் (24), சரவணன் (25). நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு அங்குள்ள சினிமா தியேட்டரில் 2வது காட்சி பார்த்துவிட்டு காரில் தரங்கம்பாடி கோட்டை பகுதிக்கு சென்று மது அருந்தியதாக தெரிகிறது. பின்னர், நேற்று அதிகாலை காரில் காரைக்கால் திரும்பி கொண்டிருந்தனர். காரை சரவணன் ஓட்டியுள்ளார். கோட்டுச்சேரி, பாரதியார் சாலையில் திரும்பிய போது எதிரே அப்பகுதியை சேர்ந்த செல்வம் (48) வந்த பைக் மீது கார் மோதியது. சுமார் 20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட செல்வம் புதருக்குள் விழுந்து இறந்தார். கட்டுப்பாட்டை இழந்த கார், கோட்டுச்சேரி காவல் நிலையம் அருகே மதகில் மோதி வாய்க்காலில் பாய்ந்தது. இதில் கணபதி, வாசிப் முஷரப் உயிரிழந்தனர்.

The post வாய்க்காலில் கார் பாய்ந்து 3 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Ganapathy ,Vasipmusharab ,Arun ,Saravanan ,Dinakaran ,
× RELATED காரைக்காலில் பாதுகாப்பின்றி நிலக்கரி...