×

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜ், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் உள்ளிட்டோருக்கு நல்லாளுமை விருது அறிவிப்பு

சென்னை: சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜனுக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற, கைவிடப்பட்ட நோயாளிகளுக்கு பிரத்யேக பிரிவு அமைத்து சிகிச்சை அளித்ததற்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜுக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் மகப்பேறு இறப்பினை குறைத்தல், குழந்தை பிறப்பு விகிதத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை எஸ்.பி. (புறநகர்) பத்ரிநாராயணனனுக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் ரீதியான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்காக கவுரவிக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கருக்கு நல்லாளுமை விருது அறிவிக்கப்பட்டுள்ளது. உதிரம் உயர்த்துவோம் திட்டம் மூலம் வளரிளம் பெண்கள் ரத்தசோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் திட்டத்திற்காக கவுரவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் தேரணிராஜ், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த அருண் தம்புராஜ் உள்ளிட்டோருக்கு நல்லாளுமை விருது அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Arun Thamburaj ,Chief Minister ,Chennai Government Medical College ,Nagai District ,Ruler ,Chennai ,Teeranirajan ,Nagai District Ruler ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...