×

கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி

 

சோழவந்தான், ஆக. 13: மதுரை சிந்தாமணியைச் சேர்ந்தவர் தினேஷ் (34). கூலித் தொழிலாளியான இவர் சோழவந்தான் அருகே உள்ள சி.புதூருக்கு திருவிழாவிற்காக வந்துள்ளார்.நேற்று இவ்வூரில் உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கிய தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வி.ஏ.ஓ மணிவேல் சோழவந்தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்தவருக்கு லட்சுமி என்ற மனைவியும், இரு குழந்தைகள் உள்ளனர்.

The post கிணற்றில் மூழ்கி தொழிலாளி பலி appeared first on Dinakaran.

Tags : Cholavandan ,Dinesh ,Chintamani, Madurai ,Dinakaran ,
× RELATED வாலிபர் தூக்கிட்டு தற்கொலை