×

செங்கல்பட்டில் சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் தகவல்

 

செங்கல்பட்டு, ஆக. 13: இது குறித்து கலெக்டர் ராகுல்நாத் வௌியிட்டுள்ள செய்திகுறிப்பு: செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள் சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிம நிறுவனங்களுக்கு 15.8.2023 (செவ்வாய்கிழமை) ‘சுதந்திர தின விழா’ அரசு விடுமுறை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் உலர் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, 15.8.2023 (செவ்வாய்கிழமை) அன்று மட்டும் மதுபானக் கடைகள் மற்றும் அனைத்து மதுக்கூடங்களும் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினங்களில் கடைகள் மதுபானக் கூடங்கள் திறந்திருந்தாலோ அல்லது சட்ட விரோதமாக இதர வழிகளில் விற்பனை செய்தாலோ உரிய சட்ட விதிமுறைகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். என அதில் தெரிவித்துள்ளார்.

The post செங்கல்பட்டில் சுதந்திர தினத்தையொட்டி டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Independence Day ,Chengalpattu ,Rahulnath ,
× RELATED 2024ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில்...