×

கிரிமியா மீது தாக்க வந்த 20 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய படை

கிவ்: உக்ரைன், ரஷ்யா போர் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது ரஷ்யா மீது உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை குறிவைத்து தொடர்ந்து 3 நாட்கள் உக்ரைன் படைகள் டிரோன் மூலம் தாக்குதல் நடத்தின. நேற்று ரஷ்யாவுடன் இணைக்கப்பட்ட கிரிமியா பகுதியை குறிவைத்து உக்ரைன் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இதில் 20 டிரோன்களை ரஷ்ய படைகள் சுட்டு வீழ்த்தின. பதிலடியாக ரஷ்யா உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள லுஹான்ஸ்க் பகுதியில் உள்ள உரோசைன் கிராமத்தில் தாக்குதல் நடத்தி, அதை மீண்டும் கைப்பற்றியது. மேலும் உக்ரைனின் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் ரஷ்ய தாக்குதலில் 73 வயதான பெண் ஒருவர் கொல்லப்பட்டார். தெற்கு ஜபோரிஜியா பகுதியில் உள்ள ஒரிகிவ் நகரின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு போலீஸ் அதிகாரி கொல்லப்பட்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த ஊரான க்ரிவி ரிஹ் நகரிலும் தாக்குதல் நடந்தது.

The post கிரிமியா மீது தாக்க வந்த 20 டிரோன்களை சுட்டு வீழ்த்தியது ரஷ்ய படை appeared first on Dinakaran.

Tags : army ,Crimea ,Kyiv ,Ukraine ,Russia ,Dinakaran ,
× RELATED நைனிடாலில் பயங்கர காட்டு தீ