×

கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு

சமயபுரம்: திருச்சி அருகே இருதரப்பு மோதலின் போது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் நம்பர் 1 டோல்கேட் அருகே தாளக்குடி ஊராட்சி அகிலாண்டபுரத்தைச் சேர்ந்தவர்கள் மித்ரன், சுரேஷ். இவர்களுக்கும், தாளக்குடியைச் சேர்ந்த மணிகண்டன், வேலு, அப்பாஸ் மற்றும் கீரமங்கலம் பரந்தாமன் ஆகியோருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று மாலை 4.30 மணியளவில் மீண்டும் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஒரு தரப்பினர் நாட்டு வெடிகுண்டை வீசினர்.

மேலும் மணிகண்டன், வேலு, பரந்தாமன், அப்பாஸ் ஆகியோர் எதிர்தரப்பை சேர்ந்த சுரேஷ், மித்ரன் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். மேலும் அவ்வழியாக சென்ற தனியார் பள்ளி பேருந்தின் கண்ணாடியை அடித்து உடைத்தனர். இதனால் அதிலிருந்த 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டனர். எஸ்.பி. வருண்குமார் நேரில் விசாரணை நடத்தினார். சமயபுரம் போலீசார் வழக்கு பதிந்து தப்பியவர்களை தேடி வருகின்றனர்.

The post கோஷ்டி மோதலில் நாட்டு வெடிகுண்டு வீச்சு appeared first on Dinakaran.

Tags : Samayapuram ,Trichy ,Trichy district ,Mannachanallur No. 1 ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...