×

கேரளாவில் ருசிகரம் லாட்டரி கடைக்காரரின் மகனுக்கு ₹80 லட்சம் பரிசு: தந்தையிடம் வாங்கிய லாட்டரியில் அதிர்ஷ்டம்

திருவனந்தபுரம்: கேரளாவில் லாட்டரி விற்பனை செய்யும் தந்தையிடமிருந்து வாங்கிய லாட்டரியில் மகனுக்கு ₹80 லட்சம் முதல் பரிசு கிடைத்தது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள மூவாற்றுபுழா பகுதியை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் அப்பகுதியில் லாட்டரிக் கடை நடத்தி வருகிறார். ரவீந்திரனின் மகன் ராஜேஷ்குமார். கட்டிடத் தொழிலாளி. ராஜேஷ் குமார் தந்தையிடமிருந்து தினமும் லாட்டரி டிக்கெட் வாங்குவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் வாங்கிய டிக்கெட்டுகளுக்கு ₹5000, ரூ.500 பரிசு கிடைத்தது. அந்த டிக்கெட்டுகளை தந்தையிடமே கொடுத்து காருண்யா பிளஸ் லாட்டரி டிக்கெட்டுகளை வாங்கினார். அதில் பிஏ 409074 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசு ₹80 லட்சம் விழுந்தது. தந்தையிடம் வாங்கிய லாட்டரிக்கு ₹80 லட்சம் பரிசு கிடைத்தது மகிழ்ச்சியைத் தருகிறது என்றும், பரிசுப் பணத்தில் தனக்கு இருக்கும் அனைத்து கடன்களையும் அடைத்து, தந்தைக்கும் உதவுவேன் என்று ராஜேஷ்குமார் கூறினார்.

The post கேரளாவில் ருசிகரம் லாட்டரி கடைக்காரரின் மகனுக்கு ₹80 லட்சம் பரிசு: தந்தையிடம் வாங்கிய லாட்டரியில் அதிர்ஷ்டம் appeared first on Dinakaran.

Tags : Rusikaram ,Kerala ,Thiruvananthapuram ,
× RELATED திருவனந்தபுரம் அருகே சாலையில்...