×

ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 79 வழக்குகளில் தீர்வு

சென்னை: உயர் நீதிமன்றத்தில் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. இதில் மொத்தம் பட்டியலிடப்பட்ட 767 வழக்குகளில் 454 வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், 313 வழக்குகள் உயர் நீதிமன்ற மதுரை கிளையிலும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற சட்ட உதவி குழு இந்த லோக் அதாலத்தை நடத்தியது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் சத்தியநாராயண பிரசாத், எஸ்.சவுந்தர், கே.குமரேஷ்பாபு, பி.பி.பாலாஜி, சக்திவேல், ராஜசேகர் ஆகியோரும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் கே.கே.ராமகிருஷ்ணன், சி.குமரப்பன், எஸ்.ஆனந்தி (ஓய்வு) ஆகியோரும் வழக்குகளை விசாரித்தனர். பட்டியலிடப்பட்ட 767 வழக்குகளில் நேற்று 79 வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இதன் மூலம் ரூ.11, 24, 97,578 பைசல் செய்யப்பட்டது.

The post ஐகோர்ட், மதுரை கிளையில் நடந்த லோக் அதாலத்தில் 79 வழக்குகளில் தீர்வு appeared first on Dinakaran.

Tags : Lok Athalam ,iCourt ,Madurai Branch ,Chennai ,Lok Adalat ,Madurai ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் எந்த கிராமத்தில் மண்...