×

‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் மூலம் பயன்பெற்ற குழந்தைகளின் உடல் நலம் எப்படி உள்ளது?..பெற்றோரிடம் முதல்வர் விசாரிப்பு

சென்னை: முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில், ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் மூலம் பயன்பெற்ற வருண் (வயது 4), நுசாய்பா (வயது 2) மற்றும் சாய்திரன் (வயது 2 1/2 வயது) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம், குழந்தைகளின் உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், இத்திட்டத்தின் கீழ் குழந்தைகளின் வளர்ச்சியை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம்களின்போது இதயத்தில் பாதிப்பு கண்டறியப்பட்டு, அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட ஹர்ஷித் (2) மற்றும் தேஜாஸ்ரீ (2) ஆகிய குழந்தைகளின் பெற்றோர்களிடம் அக்குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இதய அறுவை சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டறிந்து, நலம் விசாரித்தார். அப்போது, தமிழ்நாடு முதல்வர் அக்குழந்தைகளின் பெற்றோர்களிடம் சத்துப் பெட்டகம் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின்போது அமைச்சர் கீதாஜீவன், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, செயலாளர் சுன்சோங்கம் ஜடக் சிரு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டம் மூலம் பயன்பெற்ற குழந்தைகளின் உடல் நலம் எப்படி உள்ளது?..பெற்றோரிடம் முதல்வர் விசாரிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Chief Secretariat ,Varun ,
× RELATED பள்ளிக் கல்வியை நிறைவுசெய்து கல்லூரி...