×

தொடர் மழை காரணமாக “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் டிவீட்..!!

சென்னை: தொடர் மழை காரணமாக “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் டிவீட் செய்துள்ளார். சென்னை பனையூரில் நடைபெற இருந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 8 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் “மறக்குமா நெஞ்சம்” என்ற தலைப்பில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற இருந்தது. மழை காரணமாக இசை நிகழ்ச்சி நடைபெறும் மைதானத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. மோசமான வானிலை மற்றும் தொடர் மழை காரணமாக இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் டிவீட் செய்துள்ளார். எனது அன்புக்குரிய ரசிகர்கள் மற்றும் நண்பர்களின் பாதுகாப்பு கருதி நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இசை நிகழ்ச்சிக்கான புதிய தேதி மற்றும் முழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

The post தொடர் மழை காரணமாக “மறக்குமா நெஞ்சம்” இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் டிவீட்..!! appeared first on Dinakaran.

Tags : A.R. Raghuman ,Marakuma Nenjam ,CHENNAI ,Panayur, Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!