
சென்னை: பாஜகவின் எடுபிடியாக ஆளுநர் ரவி செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆளுநர் பதவிக்கான கண்ணியத்தை குறைக்கும் வகையில் ஆளுநர் ரவி செயல்படுகிறார் என்றும் முத்தரசன் குறிப்பிட்டார். நீட் விலக்கு தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய மசோதாவில் ஒருபோதும் ஒப்புதல் தெரிவித்து கையெழுத்திட மாட்டேன் என ஆளுநர் ஆர். என்.ரவி அறிவித்துள்ளார். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
The post பாஜகவின் எடுபிடியாக ஆளுநர் ரவி செயல்படுகிறார்: முத்தரசன் கண்டனம் appeared first on Dinakaran.