கன்னியாகுமரி, ஆக.12: கன்னியாகுமரி சின்னமுட்டம் மீன்பிடித்துறைமுக தெருவை சேர்ந்தவர் லூக்கா தாமஸ்(61). இவருக்கு மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குடும்ப பிரச்னை காரணமாக லூக்கா தாமஸ் வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளித்தார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி லூக்கா தாமஸ் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post கன்னியாகுமரியில் தீக்குளித்த முதியவர் சாவு appeared first on Dinakaran.