×

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு

வடமதுரையை அடுத்துள்ள எரியோடு பேரூராட்சிக்கு உட்பட்ட குண்டாம்பட்டியை சேர்ந்தவர் நாகராஜ் மகன் சுதர்சன் சக்திவேல்(18). திண்டுக்கல்- எரியோடு சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். வீட்டில் வளர்க்கும் வாத்து மற்றும் கோழிகளுக்கு இவர் தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது அருகில் இருந்த இரும்பு கம்பியில் மின் கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அருகில் இருந்தவர்கள் இவரை வீட்டு திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து எரியோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி இறந்தது அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

The post மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் சாவு appeared first on Dinakaran.

Tags : Nagaraj ,Sudarsan Sakthivel ,Kundambatti ,Eriodu Municipality ,Vadamadurai ,Dindigul-Eriodu road ,Dinakaran ,
× RELATED கோவையில் கணவரை கொன்ற மனைவி மற்றும்...