×

கடப்பா மாவட்டத்தில் வலிப்பால் மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய எஸ்ஐ

*எஸ்பி பாராட்டு

திருமலை : கடப்பா மாவட்டத்தில் வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய எஸ்ஐக்கு எஸ்பி பாராட்டு தெரிவித்தார்.ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், புரோதட்டூர் நகரில் உள்ள காந்தி சாலையில் நேற்று காலை முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, இரவு முழுவதும் மழை பெய்ததால் அந்த சாலையில் தண்ணீர் தேங்கியிருந்தது. அவ்வழியாக முதியவர் கடந்து சென்றபோது திடீரென அவருக்கு வலிப்பு ஏற்பட்டு சாலையில் தேங்கிய தண்ணீரில் விழுந்தார்.

ஆனால், அருகே மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்ததால், அங்கிருந்தவர்கள் யாரும் அவரை நெருங்குவதற்கு தயக்கம் காட்டினர். அப்போது, அவ்வழியாக நடைபயிற்சி சென்று கொண்டிருந்த புரோதட்டூர் போக்குவரத்து ஏஎஸ்ஐ சுப்பண்ணா இதை கவனித்தார். உடனே, முதியவர் அருகே விழுந்து கிடந்த மின்கம்பியை குச்சியால் அப்புறப்படுத்திவிட்டு அவருக்கு உதவி செய்தார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளித்த முதியவர், ஏஎஸ்ஐ சுப்பண்ணாவிற்கு நன்றி தெரிவித்தார். ெதாடர்ந்து, முதியவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அங்கே வந்ததும் ஏஎஸ்ஐ அனுப்பி வைத்தார். மயங்கி விழுந்த முதியவருக்கு ஏஎஸ்ஐ விரைந்து செயல்பட்டு உதவி செய்த தகவல் அறிந்த எஸ்பி அன்புராஜன் அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

The post கடப்பா மாவட்டத்தில் வலிப்பால் மயங்கி விழுந்த முதியவரை காப்பாற்றிய எஸ்ஐ appeared first on Dinakaran.

Tags : SI ,Kappa district ,Thirumalai ,Kadappa district ,
× RELATED சென்னை ராயபுரத்தில் எஸ்.ஐ. மீது தாக்குதல்: இளைஞர் கைது